FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!

கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு விழா பற்றி...

Updated On : 16 ஜூலை 2026, 11:39 am IST
கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு விழாவில்... - X
பகிர்:

சென்னை கொளத்தூரில் மத்திய அரசின் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு விழா இன்று (ஜூலை 16) நடைபெற்றது.

மத்திய பாஜக இணையமைச்சர் எல். முருகன் இதில் கலந்துகொண்டு பாஸ்போர்ட் சேவை மையத்தை திறந்துவைத்தார்.

பாஸ்போர்ட் தொடர்பான சேவைகளை மக்கள் இந்த மையத்திலேயே பெற முடியும்.

Advertisement

Advertisement

இந்த நிகழ்ச்சியில் வடசென்னை தொகுதி எம்.பி. கலாநிதி வீராசாமி, கொளத்தூர் தொகுதி எம்எல்ஏ வி.எஸ். பாபு ஆகியோருடன் சென்னை மேயர் பிரியாவும் கலந்துகொண்டார்.

சென்னை மேயர் பிரியா, சமீபமாக சென்னையில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதைத் தவிர்த்து வருகிறார். குறிப்பாக தவெக அரசின் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதில்லை என்று கூறப்படுகிறது.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் சென்னையில் முதல்வர் விஜய் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் மேயர் பிரியாவுக்கு அழைப்பு விடுத்தும் அவர் கலந்துகொள்ளவில்லை. இதேபோல பெரம்பூர் தொகுதியில் முதல்வரின் நிகழ்ச்சியிலும் மேயர் பிரியா கலந்துகொள்ளாதது குறிப்பிடத்தக்கது.

ஆனால், இன்று மத்திய அரசு சார்ந்த நிகழ்ச்சியில் மேயர் பிரியா கலந்துகொண்டுள்ளது பேசுபொருளாகியுள்ளது.

summary

Chennai mayor priya in central govt event in chennai

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments