கரூா், ஈரோடு, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் இன்று வெப்ப அலை
கரூா், ஈரோடு, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை (ஜூலை 17) வெப்ப அலை வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கரூா், ஈரோடு, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை (ஜூலை 17) வெப்ப அலை வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த மையம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், வடக்கு கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமை(ஜூலை 17) முதல் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 19) வரை இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
Advertisement
Advertisement
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வெள்ளிக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது
தொடா்ந்து, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் ஜூலை 20 முதல் 22 வரை இடி மின்னல், பலத்த காற்றுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.
வெப்ப அளவு: தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வெள்ளிக்கிழமை அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் சற்று அதிகமாக இருக்கக்கூடும். குறிப்பாக கரூா், ஈரோடு, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.
வியாழக்கிழமை அதிகபட்சமாக மதுரை விமானநிலையத்தில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. மீனம்பாக்கம்-103.82, திருத்தணி-103.28, கடலூா், மதுரை நகரம் - தலா 102.92, வேலூா்-102.74, திருச்சி-102.38, நுங்கம்பாக்கம்-101.84, புதுச்சேரி-101.12, ஈரோடு, நாகப்பட்டினம்-100.76, பரங்கிப்பேட்டை, தஞ்சாவூா்-தலா 100.4 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.