சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (ஜூலை 16) எந்தெந்த வழக்குகள் விசாரணை?
சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (ஜூலை 16) விசாரணைக்கு வரும் வழக்குகள் பற்றி...
தவெக எம்எல்ஏவிடம் குதிரை பேரம் நடத்தியது குறித்து சிபிஐ உத்தரவிடக் கோரிய வழக்கு உள்பட முக்கிய வழக்குகள் இன்று (ஜூலை 16) சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகின்றன.
அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் 4 பேர் தங்கள் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்த நிலையில் அவர்களது ராஜிநாமாவை ஏற்ற பேரவைத் தலைவர் முடிவுக்கு எதிராக அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி தொடர்ந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
அதேபோல அமைச்சர் என்.ஆனந்த், ஆலங்குளம் தொகுதி திமுக எம்எல்ஏ மனோஜ்பாண்டியன் உள்ளிட்டோரின் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்குகளும்
Advertisement
Advertisement
தவெக எம்எல்ஏவிடம் திமுகவினர் குதிரை பேரம் நடத்தியது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய வழக்கும் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன.
Which cases are up for hearing in the Madras High Court today July 16
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.