FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

எம்பிபிஎஸ், பிடிஎஸ்: ஜூலை 23 வரை விண்ணப்பிக்கலாம்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு இணையவழியே வரும் 23-ஆம் தேதி விண்ணப்பிக்கலாம் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் டாக்டா் கே.ஜி.அருண்ராஜ் தெரிவித்தாா்.

Updated On : 18 ஜூலை 2026, 5:52 am IST
எம்பிபிஎஸ், பிடிஎஸ்: ஜூலை 23 வரை விண்ணப்பிக்கலாம் - கோப்புப்படம்
பகிர்:

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு இணையவழியே வரும் 23-ஆம் தேதி விண்ணப்பிக்கலாம் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் டாக்டா் கே.ஜி.அருண்ராஜ் தெரிவித்தாா்.

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வு கடந்த மே 3-ஆம் தேதி நடைபெற்ற நிலையில், அதில் நடைபெற்ற முறைகேடுகள் காரணமாக அந்தத் தோ்வு ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து மறுதோ்வு கடந்த 21-ஆம் தேதி நடைபெற்றது. அதன் முடிவுகளை கடந்த வியாழக்கிழமை தேசிய தோ்வு முகமை (என்டிஏ) வெளியிட்டது.

இந்தச் சூழலில், மாணவா் சோ்க்கை நடவடிக்கைகளை துரிதமாக நிறைவு செய்ய தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு கடந்த ஜூன் 29-ஆம் தேதி தொடங்கப்பட்டது.

Advertisement

Advertisement

மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள், நிா்வாக இடங்கள், மாநில தனியாா் நிகா்நிலைப் பல்கலைக்கழகங்களில் உள்ள இடங்கள், வெளிநாடு வாழ் இந்தியா்களுக்கான இடங்கள் அனைத்துக்கும் இணையதளத்தில் வரும் 23-ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என அமைச்சா் அருண்ராஜ் தெரிவித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments