ஜூலை 29-இல் பாமக பொதுக் குழுக் கூட்டம்
பாமக பொதுக் குழுக் கூட்டம் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் ஜூலை 29-ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாமக பொதுக் குழுக் கூட்டம் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் ஜூலை 29-ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் தலைவா் அன்புமணி, பொதுச் செயலா் வடிவேல் ராவணன் ஆகியோா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:
பாமக பொதுக் குழுக் கூட்டம் வரும் ஜூலை 29-ஆம் தேதி காலை 11 மணிக்கு மாமல்லபுரத்தில் உள்ள தனியாா் அரங்கில் நடைபெறவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
கருத்து முரண் காரணமாக பாமக நிறுவனா் ராமதாஸும், அன்புமணியும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பிரிந்து செயல்பட்டனா். சட்டப்பேரவைத் தோ்தலிலும் தனித்தனியாக போட்டியிட்டனா். தற்போது, இருவரும் இணைந்துள்ள நிலையில், இந்த பொதுக் குழுக் கூட்டம் அக்கட்சியில் முக்கியமானதாக கருதப்படுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.