FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

பராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்

வெள்ளிக்கிழமை (ஜூன் 6) முதல் குறிப்பிட்ட நாள்களில் 7 விரைவு ரயில்கள் தாமதமாக செல்லும்

Updated On : 5 ஜூன் 2026, 2:39 am IST
- பிடிஐ
பகிர்:

சென்னை ரயில்வே கோட்டத்தில் பராமரிப்புப் பணிகளால் வெள்ளிக்கிழமை (ஜூன் 6) முதல் குறிப்பிட்ட நாள்களில் 7 விரைவு ரயில்கள் தாமதமாக செல்லும் என தெற்கு ரயில்வே சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்தி:சென்னை ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் ரயில் தண்டவாளம் உள்ளிட்ட பராமரிப்புப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. அதனால், வரும் சனிக்கிழமை (ஜூன் 6) பிற்பகல் 1.15 மணிக்கு சென்னை எழும்பூரிலிருந்து புறப்பட்டு மதுரை செல்லும் வைகை அதிவிரைவு ரயில் (எண் 12635) வழியில் 1 மணி நேரம் தாமதமாக செல்லும். வரும் சனிக்கிழமை திருச்சியிலிருந்து பிற்பகல் 1.15 மணிக்குப் புறப்படும் பகத்கீ கோதி அதிவிரைவு ரயில் (எண் 20482) வழியில் 1.30 மணி தாமதமாகச் செல்லும்.

வரும் ஜூன் 6, 9, 13, 16, 18, 21 ஆகிய தேதிகளில் ஹவுராவிலிருந்து இரவு 11.45 மணிக்குப் புறப்பட்டு சென்னை சென்ட்ரல் நிலையம் வரும் ரயில் (எண் 12839) வழியில் 50 நிமிஷம் தாமதமாக செல்லும். வரும் 23 ஆம் தேதி ஹவுராவிலிருந்து இரவு 11.45 மணிக்குப் புறப்பட்டு சென்னை சென்ட்ரல் நிலையம் வரும் ரயில் (எண் 12839) 55 நிமிஷங்கள் தாமதமாக இயக்கப்படும்.

Advertisement

Advertisement

வரும் 9, 16, 23 ஆகிய தேதிகளில் சாலிமரிலிருந்து இரவு 11. 45 மணிக்குப் புறப்பட்டு திருவனந்தபுரம் செல்லும் அதிவிரைவு ரயில் (எண் 22642) வழியில் 55 நிமிஷங்கள் தாமதமாக இயக்கப்படும். வரும் ஜூன் 23 ஆம் தேதி காட்பாடியிலிருந்து மாலை 7.25 மணிக்குப் புறப்பட்டு திருப்பதி செல்லும் பயணிகள் மெமு ரயில் வழியில் 35 நிமிஷங்கள் தாமதமாக இயக்கப்படும்.

வரும் ஜூன் 4, 11, 18 ஆகிய தேதிகளில் பிற்பகல் 2 மணிக்கு பாட்னாவிலிருந்து புறப்படும் எா்ணாகுளம் விரைவு ரயில் (எண் 22644) வழியில் 55 நிமிஷங்கள் தாமதமாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments