வீட்டுக்குள் புகுந்து பெண்ணுக்கு பாலியல் தொல்லை: முன்னாள் தவெக நிர்வாகி மீது வழக்கு
ஆலந்தூரில் பெண்ணின் வீட்டுக்குள் புகுந்து பாலியல் தொல்லை அளித்ததாக தவெக நிர்வாகி மீது புகார்
சென்னை ஆலந்தூரில் பெண்ணின் வீட்டுக்குள் புகுந்து பாலியல் தொல்லை அளித்ததாக தவெக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை ஆலந்தூரில் கணவரை இழந்த பெண்ணுக்கு தவெக ஆலந்தூர் தொகுதி வடக்கு பகுதி செயலாளர் வேம்புலி தொடர் பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், பெண் தனியாக இருப்பதை அறிந்து இரவு நேரத்தில் அவரின் வீட்டுக்கு வேம்புலி சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து காவல் நிலையத்தில் பெண் அளித்த புகாரின் அடிப்படையில் பாலியல் தொல்லை, பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Advertisement
Advertisement
இதனிடையே, கட்சியின் ஒழுங்கு விதிமுறைகளுக்கு முரணான செயல்பாடுகளில் வேம்புலி ஈடுபட்டதாகவும், கட்சியின் நற்பெயருக்கு அவப்பெயர் ஏற்படுத்தியதாகவும் கூறி, வேம்புலியை தவெகவின் அடிப்படை உறுப்பினர் பதவி உள்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்து நீக்கி, தவெக எம்எல்ஏ பி. சரவணன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
Case filed against former TVK leader Vempuli for trespassing into a house and sexually harassing a woman
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.