முகப்பு
தமிழ்நாடு

நிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!

கேரளத்தில் நிபா வைரஸ் பாதிப்பால் தமிழகத்தில் கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரவு....

Updated On : 12 ஜூன் 2026, 12:02 pm IST
நிபா வைரஸ் தடுப்பு சோதனையில் ஈடுபட்ட சுகாதார துறையினர். - கோப்புப்படம்
பகிர்:

கேரளத்தில் ஒருவருக்கு நிஃபா வைரஸ் உறுதி செய்யப்பட்டதையடுத்து தமிழகத்தில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் ஒருவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் தற்போது வெண்டிலேட்டர் உதவியுடன் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.

அந்த நபருடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறிந்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தற்போது 77 பேர் கண்காணிப்பில் இருப்பதாகவும் அவர்களில் 15 பேர் தீவிர அறிகுறிகளுடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இந்நிலையில் கேரளத்தில் நிபா வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளதையடுத்து தமிழகத்தில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கேரளத்தில் இருந்து தமிழ்நாட்டிற்கு வருவோரைத் தீவிரமாக கண்காணிக்கவும் அறிகுறிகள் இருந்தால் அவர்களைத் தனிமைப்படுத்தவும் மருத்துவ அலுவலர்களுக்கு தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்குமாறு சுகாதாரத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

summary

Nipah virus infection confirmed in kerala; Ordered to intensify surveillance in Tamil Nadu

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.