நிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!
கேரளத்தில் நிபா வைரஸ் பாதிப்பால் தமிழகத்தில் கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரவு....
கேரளத்தில் ஒருவருக்கு நிஃபா வைரஸ் உறுதி செய்யப்பட்டதையடுத்து தமிழகத்தில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் ஒருவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் தற்போது வெண்டிலேட்டர் உதவியுடன் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.
அந்த நபருடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறிந்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தற்போது 77 பேர் கண்காணிப்பில் இருப்பதாகவும் அவர்களில் 15 பேர் தீவிர அறிகுறிகளுடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இந்நிலையில் கேரளத்தில் நிபா வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளதையடுத்து தமிழகத்தில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கேரளத்தில் இருந்து தமிழ்நாட்டிற்கு வருவோரைத் தீவிரமாக கண்காணிக்கவும் அறிகுறிகள் இருந்தால் அவர்களைத் தனிமைப்படுத்தவும் மருத்துவ அலுவலர்களுக்கு தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்குமாறு சுகாதாரத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Nipah virus infection confirmed in kerala; Ordered to intensify surveillance in Tamil Nadu
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.