மேட்டூர் அணை நீர் திறப்பு எப்போது? அமைச்சர் வினோத் பதில்!
மேட்டூர் அணை நீர் திறப்பு குறித்து அமைச்சர் வினோத் தெரிவித்தது குறித்து...
மேட்டூர் அணையில் 70 அடி நீர் இருப்பதால், திறக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் வினோத் தெரிவித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள வணிக வளாக கட்டடத்தில் "மாம்பழ மேளா -2026" பிரத்யேக மாம்பழக் கண்காட்சியை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் வினோத் தொடக்கி வைத்தார்.
இன்று முதல் ஜூன் 14ஆம் தேதி வரை நடைபெறும் இந்த மாம்பழ கண்காட்சி மற்றும் விற்பனை நிலையத்தில், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ஆந்திர பிரதேசம், கர்நாடகம், தமிழ்நாடு, கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பல்வேறு வகையான மாம்பழங்கள் வைக்கப்பட்டுள்ளன.
Advertisement
Advertisement
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் வினோத், ”70 அடி நீர் இருப்பதால் மேட்டூர் அணை திறக்க முடியாத சூழல். விவசாயிகளை முதல்வர் கைவிட மாட்டார்.
விவசாயிகளுக்கு தேவையானதை முதல்வர் செய்து கொடுப்பார். விவசாயிகளின் பாசன வசதிக்காக, நீர் தட்டுப்பாட்டை போக்கக்கூடிய வகையில், நீர் திறப்பை கொடுக்கும் வகையில் ஆலோசனை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம் விவசாயிகளுக்கு பலனளிக்கும் எனவும் அவர் மேலும் கூறினார்.
தொடர்ந்து மாம்பழங்கள் மீது தெளிக்கப்படும் தோட்டக்கலைத்துறை பரிந்துரைத்த பூச்சிக்கொல்லி மருந்தினால், மாம்பழங்களில் ரசாயனத் தன்மை இருப்பதால், ஏற்றுமதி பாதிப்பு ஏற்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, ”பூச்சிக்கொல்லி மருந்துகள் மாற்றப்பட்டுள்ளன” என அமைச்சர் வினோத் பதில் அளித்தார்.
Agriculture and Farmers Welfare Minister Vinoth has stated that a situation has arisen where the Mettur Dam cannot be opened, as the water level stands at 70 feet.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.