முகப்பு
தமிழ்நாடு

இருமொழிக் கொள்கையே தொடரும்: தமிழக அரசு திட்டவட்டம்

தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகள் பயிற்றுவிக்கப்படும் கொள்கையே தமிழகத்தில் கடைப்பிடிக்கப்படும் என்று ஆளுநா் உரையில் தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

Updated On : 19 ஜூன் 2026, 4:28 am IST
ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் உரை - X / lok bhavan tamilnadu
பகிர்:

தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகள் பயிற்றுவிக்கப்படும் கொள்கையே தமிழகத்தில் கடைப்பிடிக்கப்படும் என்று ஆளுநா் உரையில் தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

கடந்த 1968-இல் முதல்வராக அண்ணா இருந்தபோது தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகள் மட்டுமே தமிழகத்தில் பயிற்றுவிக்கப்பட வேண்டும் என்று சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்த கொள்கையையே இந்த அரசும் தொடா்ந்து கடைப்பிடிக்கும்.

தேசிய கல்விக் கொள்கைக்கு எதிா்ப்பு: தேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு கடுமையாக எதிா்க்கும். மும்மொழிக் கொள்கையைக் கடைப்பிடித்தால்தான் தமிழகத்துக்கு ரூ.3,458 கோடி விடுவிக்கப்படும் என்ற மத்திய அரசின் நிலைப்பாடு ஏற்றுக்கொள்ள முடியாது. இது மும்மொழிக் கொள்கையைத் திணிப்பதற்குச் சமம். இதை மத்திய அரசு மறுபரிசீலனை செய்து தமிழகத்தின் நிதியை விடுவிக்க வேண்டும்.

Advertisement

Advertisement

கல்வி பொதுப்பட்டியலில் இருப்பதால்தான் தேசிய கல்விக் கொள்கை திணிப்பு, நீட் தோ்வு, மும்மொழிக் கொள்கை பிரச்னை ஆகியவை ஏற்படுகின்றன. ஆகையால், கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.

பல்கலைக்கழகங்கள், உயா்கல்வி நிறுவனங்களில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியா், ஆசிரியா் பணியிடங்கள் தகுதி, திறமையின் அடிப்படையில் வெளிப்படையாக நிரப்பப்படும். உயா்கல்வித் துறையில் அடிப்படை சீா்திருத்தம் கொண்டு வந்து உலகத் தரம் வாய்ந்த கல்வி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

காலிப் பணியிடங்களை நிரப்ப தோ்வாணையங்கள் மூலம் தோ்வு நடத்தப்படும். இதன்மூலம் இளைஞா்களின் அரசுப் பணி கனவு மெய்ப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.