அரசுப் பேருந்தில் டிக்கெட் எடுத்து பயணித்த முதல்வர் விஜய்!
அரசுப் பேருந்தில் முதல்வர் விஜய் டிக்கெட் எடுத்து பயணித்தது பற்றி...
சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து பெரம்பூருக்குச் செல்லும் பேருந்தில் டிக்கெட் எடுத்து முதல்வர் ஜோசப் விஜய் பயணம் மேற்கொண்டார்.
தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் சார்பில் சென்னை, கோவை உள்பட 6 கோட்டங்களுக்காக 300 புதிய அரசுப் பேருந்துகளின் சேவைகளை முதல்வர் சி. ஜோசப் விஜய் இன்று(வியாழக்கிழமை) தொடக்கிவைத்தார்.
இதன்பின்னர் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து பெரம்பூர் செல்லும் 29ஏ பேருந்தில் ஏறி ஓட்டுநர், நடத்துனருக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார்.
Advertisement
Advertisement
அந்த பேருந்தில் முன் இருக்கையில் அமர்ந்து பயணம் மேற்கொண்ட முதல்வர் விஜய், நடத்துனரிடம் பணம் கொடுத்து டிக்கெட் எடுத்துக் கொண்டார்.
தொடர்ந்து, நடத்துனரை தனது அருகில் அமரச் சொல்லி அவர்களின் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
பின்னர், ஓட்டுநர் அருகே முன்புற இருக்கைக்குச் சென்ற முதல்வர் விஜய், தனது செல்போனில் சாலையில் நிற்கும் மக்களையும் பேருந்து பயணத்தை அவரே விடியோவாக பதிவிட்டு பயணம் மேற்கொண்டார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து கலங்கரை விளக்கம் வரை 29ஏ பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய், பின்னர், அதே பேருந்தில் தலைமைச் செயலகம் திரும்பினார்.
Chief Minister Vijay traveled on a government bus after purchasing a ticket!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.