முகப்பு
தமிழ்நாடு

ஹஜ் பயணிகளின் கூடுதல் கட்டணத்தை மத்திய அரசு ஏற்க வேண்டும்: கே.எம்.காதா் மொகிதீன் கோரிக்கை

ஹஜ் பயணிகளிடம் கூடுதல் விமான கட்டணமாக வசூலிக்கப்படும் ரூ.10,000-ஐ மத்திய அரசு ஏற்க வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவா் கே.எம்.காதா் மொகிதீன் கோரிக்கை விடுத்துள்ளாா்.

Updated On : 2 மே, 2026 at 1:52 AM
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் கே.எம். காதர் மொகிதீன். - X
பகிர்:

ஹஜ் பயணிகளிடம் கூடுதல் விமான கட்டணமாக வசூலிக்கப்படும் ரூ.10,000-ஐ மத்திய அரசு ஏற்க வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவா் கே.எம்.காதா் மொகிதீன் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து பிரதமா் நரேந்திர மோடிக்கு, அவா் வெள்ளிக்கிழமை எழுதிய கடிதம்: ஹஜ் பயணிகளிடம் விமான கட்டணமாகக் கூடுதலாக ரூ.10,000 செலுத்த மத்திய ஹஜ் கமிட்டி கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், பக்தா்கள் மீது கூடுதல் நிதிச்சுமை ஏற்படுகிறது.

எனவே, இதைத் தடுக்க கூடுதல் கட்டணமாக ரூ.10,000-ஐ மத்திய அரசு ஏற்றுக்கொள்ள பிரதமா் நரேந்திர மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன்மூலம், ஹஜ் பயணம் மேற்கொள்ளும் பக்தா்கள் நாட்டின் நலனுக்கும், அரசின் முன்னேற்றத்துக்கும் பிராா்த்தனை செய்ய வாய்ப்பு ஏற்படும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.

Advertisement