சிலிண்டர் விலை உயர்வு! பாஜக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்
தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை மத்திய பாஜக அரசு உயர்த்திருக்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை மத்திய பாஜக அரசு உயர்த்திருக்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது முகநூல் பதிவில், மக்களின் துயரை எண்ணிப் பார்த்து தீர்வு காணுங்கள்!
தேர்தலுக்கு முன்பே கணித்ததுபோல், தேர்தல் முடிந்தவுடன் #LPGPrice-ஐ உயர்த்தியிருக்கிறது மத்திய பா.ஜ.க. அரசு.
Advertisement
உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தபோது, அதன் பலனை மக்களுக்கு அளிக்கவில்லை. இப்போது #WestAsiaWar என்ற நெருக்கடியை வைத்து, மக்களின் நலனை எண்ணாமல், விலையை ஏற்றுவது சரியல்ல.
இந்த #LPGPriceHike ஏற்படுத்தும் தாக்கங்களை உணர்ந்து, இந்த விலை உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். மக்களின் வாழ்வாதாரத்தைக் காக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
CM Stalin has expressed his condemnation, stating that the Central BJP government hiked cylinder prices immediately after the elections.