அயோத்திதாச பண்டிதர் உருவச்சிலைக்கு முதல்வர் விஜய் மரியாதை!
அயோத்திதாச பண்டிதர் பிறந்தநாளையொட்டி முதல்வர் சி. ஜோசப் விஜய் மரியாதை செலுத்தினார்.
சமூக சீர்திருத்தவாதி அயோத்திதாச பண்டிதரின் பிறந்தநாளையொட்டி, அவரது சிலைக்கு முதல்வர் சி. ஜோசப் விஜய் மரியாதை செலுத்தினார்.
தமிழ்நாட்டில் தீண்டாமை, சாதி ஒழிப்பு, பெண்ணுரிமை, தமிழ்மொழி உணர்வு, சுயமரியாதை, பகுத்தறிவுக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும், சாதியக் கொடுமைகளுக்கு எதிராகவும் குரல் கொடுத்த தென்னிந்தியாவின் முதல் சாதி எதிர்ப்புப் போராளியும் சமூக சீர்திருத்தவாதியுமான அயோத்திதாச பண்டிதரின் பிறந்தநாள் இன்று (மே 20) கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி, சென்னை கிண்டி காந்தி மண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு முதல்வர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
Advertisement
Advertisement
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய், முதல்வராகப் பதவியேற்ற பின்னர் முதல்முறையாக வெளியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்யுடன் அமைச்சர்கள் செங்கோட்டையன், என். ஆனந்த், ஆர். நிர்மல்குமார், வெங்கட்ரமணன், ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன், பிரபு உள்ளிட்டோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.