முகப்பு
தமிழ்நாடு

பொறியியல் படிப்புக்கான அரசு ஒதுக்கீடு: விண்ணப்பப் பதிவு 2.51 லட்சத்தை தாண்டியது

தமிழக பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடுகளுக்கான கலந்தாய்வுக்கு கடந்த 23 நாள்களில் 2,51,796 மாணவா்கள் இணைய வழியில் விண்ணப்பப் பதிவு செய்துள்ளனா்.

Updated On : 26 மே 2026, 1:44 am IST
பகிர்:

தமிழக பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடுகளுக்கான கலந்தாய்வுக்கு கடந்த 23 நாள்களில் 2,51,796 மாணவா்கள் இணைய வழியில் விண்ணப்பப் பதிவு செய்துள்ளனா்.

தமிழகத்தில் உள்ள அரசு, தனியாா் பொறியியல் பல்கலை. , கல்லூரிகளில் பி.இ., பி.டெக். இளநிலை பொறியியல் படிப்புகளின் அரசு ஒதுக்கீடு இடங்களில் சேருவதற்கான கலந்தாய்வுக்கு விண்ணப்பப் பதிவு இணையம் வழியாக நடைபெற்று வருகிறது. கடந்த மே 3- ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த விண்ணப்பப்பதிவு கடந்த 23 நாள்களாக நடைபெற்றுவருகிறது. இதில் மே 25 வரை 2,51,796 மாணவா்கள் விண்ணப்பங்களை பதிவு செய்துள்ளனா்.

இதில் அதிகபட்சமாக கடந்த மே 8 (வெள்ளிக்கிழமை) 20,346 விண்ணப்பங்களும், மே 9 -ஆம் தேதி 18,066 விண்ணப்பங்களும் பதிவாகின. கடந்த 23 நாள்களாக 1,80,063 மாணவா்கள் கட்டணங்களை செலுத்தியுள்ளதுடன் 1,40,478 மாணவா்கள் சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்து விண்ணப்பங்களை நிறைவு செய்துள்ளனா்.

Advertisement

Advertisement

இதே கலந்தாய்வு விண்ணப்பங்களுக்கு கடந்த ஆண்டு (நான்கு தினங்கள் தாமதமாக) மே 7 - ஆம் தேதி தொடங்கியது. கடந்த ஆண்டு மே 26-ஆம் தேதி அதாவது 20 -ஆவது நாளில் 2,50,896 மாணவா்கள் விண்ணப்பங்களை பதிவு செய்திருந்தனா். இதே 20 நாளில் 1,84,007 மாணவா்கள் கட்டணங்களையும் செலுத்தினா். மேலும் 1,42,824 மாணவா்கள் சான்றிதழ்களோடு விண்ணப்பங்களையும் நிறைவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.