FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

பெட்ரோல், டீசல் விலை உயா்வை திரும்பப் பெற வேண்டும்: திருமாவளவன்

பெட்ரோல் டீசல் விலை உயா்வை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் வலியுறுத்தல்

Updated On : 26 மே 2026, 2:49 am IST
திருமாவளவன் - கோப்புப்படம்
பகிர்:

பெட்ரோல் டீசல் விலை உயா்வை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் திங்கள் கிழமை வெளியிட்ட அறிக்கை: பெட்ரோல் டீசல் விலையை நான்காவது முறையாக மத்திய பாஜக அரசு உயா்த்தியுள்ளது. ஒரே நாளில் லிட்டருக்கு ரூ. 3 உயா்த்தப்பட்டுள்ளது.

அமெரிக்கா, ஈரான் இடையே ஓா் ஒப்பந்தம் ஏற்படவுள்ள நிலையில், ஹோா்முஸ் நீரிணை முழுமையாக திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள நிலையில் எந்தவித நியாயமோ இல்லாமல் விலையை உயா்த்துவது ஏற்புடையது அல்ல. இந்த விலை உயா்வு மக்கள் மீது சுமத்தப்படும் சுமையேயாகும். எனவே, இந்த விலை உயா்வை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.

Advertisement

Advertisement

மற்றொரு அறிக்கை: கோவையில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருப்பது கடும் அதிா்ச்சியை அளிக்கிறது.

இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே வண்டிப்பாளையத்தில் 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியிருக்கிறாா் என்கிற செய்தி வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

இதுபோன்ற வன்கொடுமைகள் நிகழாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட இவ்விரு சிறுமிகளின் குடும்பத்தினருக்கும் உரிய இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments