முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் நல்ல மாற்றங்கள் வரப்போகிறது: முதல்வரைச் சந்தித்த நடிகை குஷ்பு!

தமிழக முதல்வர் விஜய்யை சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் நடிகை குஷ்பூ இன்று சந்தித்தார்.

Updated On : 25 மே 2026, 7:39 pm IST
முதல்வர் விஜய்யுடன் நடிகை குஷ்பு - X
பகிர்:

தமிழக முதல்வர் விஜய்யை சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் நடிகை குஷ்பூ இன்று சந்தித்தார்.

சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகிகளுடன் இன்று தமிழக முதல்வரைச் சந்தித்த நடிகை குஷ்பு தயாரிப்பாளர்கள் சார்பில் சில கோரிக்கைகளை முதல்வரிடம் வைத்தார்.

முதல்வரைச் சந்தித்த பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய குஷ்பூ, “சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கம் சார்பாக சின்னத்திரையில் கஷ்டப்படும் தயாரிப்பாளர்களின் நலனுக்காக சில கோரிக்கைகளை முதல்வரிடம் வைத்துள்ளோம். கோரிக்கைகளை நிறைவேற்றித் தருகிறோம் என முதல்வரும், அமைச்சர் ராஜ்மோகனும் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

முதல்வர் விஜய்யை எனது தம்பி என்று சொல்வதற்கு எனக்குப் பெருமையாக உள்ளது. ஒரு அக்காவாக அவரை இன்று நேரில் பார்த்ததும் உணர்ச்சிபூர்வமாக இருந்தது. அவரது செயல்பாடுகள் பற்றி சொல்லவேண்டுமென்றால், நிச்சயமாக தமிழகத்தில் நல்ல மாற்றங்களைக் கொண்டு வரப்போகிறார் எனத் தெரிகிறது.

அனைவரும் மாமனா, மச்சானா என்று பார்க்காமல் மக்களுக்காக நல்லது செய்யும் நோக்கில் செயல்படுகின்றனர்” என்று தெரிவித்தார்.

பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் பற்றி கேள்வியெழுப்பியபோது, “மற்ற கட்சிகள் இத்தனை ஆண்டுகளாக தாங்கள் செய்த ஆட்சியை மறந்துவிட்டு கேள்வி எழுப்புகின்றனர். அவருக்கு அதற்கான நேரத்தைக் கொடுங்கள். உங்கள் தந்தையும் நீங்களும் இத்தனை ஆண்டுகளாகக் கொண்டு வரமுடியாத மாற்றத்தை விஜய் பத்து நாள்களில் எப்படிக் கொண்டுவரமுடியும்? நிச்சயமாக மாற்றம் வரும். அதற்காகத் தான் விஜய்யை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்” என்று பேசினார்.

summary

Positive changes are coming to Tamil Nadu: Actress Khushbu meets the Chief Minister.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.