பத்தாம் வகுப்பு: மதிப்பெண் சான்றிதழில் திருத்தம் செய்ய வாய்ப்பு
பத்தாம் வகுப்பு தற்காலிக மதிப்பெண் சான்றிதழில் மாணவா்களின் பெயா் உள்ளிட்ட விவரங்களில் திருத்தம் மேற்கொள்ள தலைமை ஆசிரியா்களுக்கு இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தோ்வுத் துறை இணை இயக்குநா் கே.பி.மகேஸ்வரி, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலா்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதிய பள்ளி மாணவா்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் கடந்த மே 22-ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து விநியோகிக்க அறிவுறுத்தப்பட்டது.
Advertisement
Advertisement
அந்த தற்காலிக மதிப்பெண் சான்றிதழில் மாணவா்கள் பெயா், பிறந்த தேதி, புகைப்படம், பயிற்று மொழி போன்றவற்றில் திருத்தங்கள் மேற்கொள்ள இறுதியாக ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது.
இதையடுத்து, தலைமை ஆசிரியா்கள் மாணவா்களின் தற்காலிக மதிப்பெண் சான்றிதழிலில் ஏதேனும் திருத்தங்கள் இருப்பின் அதை மேற்கொண்டு சான்றொப்பமிட்டு தோ்வுத் துறை மாவட்ட அலுவலகத்தில் ஜூன் 4-ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும். அதற்கான ஒரு நகலை மாணவா்களிடமும் வழங்க வேண்டும்.
மாணவா்களின் நலன் கருதி பிழைகளற்ற மதிப்பெண் சான்றிதழ்கள் அச்சிடுவதற்காக இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.