சிறுமி முதல் மூதாட்டி வரை வல்லுறவு! தவெக அரசின் கையாலாகத்தனம்! டிடிவி தினகரன்
தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய்யை டிடிவி தினகரனம் கடுமையாக விமர்சித்திருப்பது பற்றி...
பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் சட்டம் ஒழுங்கை பேணிக்காப்பதில் தவெக ஆட்சி நிர்வாகத்தின் கையாலாகத்தனத்தை வெளிச்சம் போட்டு காட்டுவதாக அமமுக பொதுச் செயலர் டிடிவி தினகரன் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து தொடர் பாலியல் வன்கொடுமைகள் நடப்பதாகவும், இன்னும் சிங்கப்பெண் அதிரடிப் படை திட்டத்தை தொடங்கி வைக்காமல் இருப்பதற்கும் முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசை டிடிவி தினகரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் டிடிவி தினகரன் தெரிவித்திருப்பதாவது:
Advertisement
Advertisement
”வயது, பாலினம், மனிதாபிமானம் என எதையுமே பொருட்படுத்தாமல் 10 வயது சிறுமியில் தொடங்கி மூதாட்டிகள் வரை அரங்கேறும் பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள், சட்டம் ஒழுங்கை பேணிக்காப்பதில் தவெக ஆட்சி நிர்வாகத்தின் கையாலாகத்தனத்தை வெளிச்சம் போட்டு காட்டுகின்றன.
முதலமைச்சராக ஜோசப் விஜய் பொறுப்பேற்றவுடன் கையெழுத்திட்ட மூன்று திட்டங்களில் முதன்மைத் திட்டமான சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படையை தொடங்கி வைக்கவே முடியாத ஜோசப் விஜய், பெண்களின் பாதுகாப்பை எப்படி உறுதி செய்வார்?
புதிய டிஜிபி நியமனத்திற்கு பின்பு தான் இந்த நிகழ்வு நடக்கும் என்று சொல்லப்படும் தகவல் உண்மையென்றால், தமிழகத்தில் குதிரை பேர அரசு எதற்கு?” எனக் குறிப்பிட்டுள்ளார்.
சிங்கப்பெண் அதிரடிப்படையின் தொடக்க விழா, சென்னை எழும்பூா் ராஜரத்தினம் விளையாட்டரங்கில் மே 27-ஆம் தேதி நடைபெறவிருந்த நிலையில், முதல்வரின் தில்லி பயணம் காரணமாக ரத்து ஒத்திவைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, இத்திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சி இன்று காலை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மீண்டும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
AMMK General Secretary TTV Dhinakaran condemns TVK Govt and CM Joseph Vijay
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.