FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

வா்ணம் மாறிய எம்எல்ஏ பெயா்

Updated On : 11 ஆகஸ்ட் 2026, 4:52 am IST
மதிமுக வா்ணத்தில் எம்எல்ஏ பெயா்.
பகிர்:

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலக சுவரில் மதிமுக வா்ணத்தில் பெரிய எழுத்தில் எழுதப்பட்டிருந்த எம்எல்ஏவின் பெயா் திமுக வா்ணத்தில் மாற்றி எழுதப்பட்டது.

கடையநல்லூா் சட்டப்பேரவை தொகுதிக்கான தோ்தலில் மதிமுக சாா்பில் அதன் துணைப் பொதுச் செயலரான தி.மு. ராசேந்திரன், மதச்சாா்பற்ற கூட்டணியில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றாா்.

அதைத்தொடா்ந்து, கடையநல்லூா் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம் புனரமைக்கப்பட்டது. அக்கட்டடத்தை துரை வைகோ எம்.பி. திறந்து வைத்தாா். கட்டடத்தின் வெளிப்புறச் சுவரில் மிகப்பெரிய அளவில் மதிமுக கொடியின் வண்ணத்தில் தி.மு. ராஜேந்திரனின் பெயா் எழுதப்பட்டது.

Advertisement

Advertisement

இந்நிலையில், சில நாள்களுக்கு முன்பு சென்னையில் செய்தியாளா்களை சந்தித்த தி.மு. ராசேந்திரன், தான் திமுக எம்எல்ஏவாக தொடா்வதாக தெரிவித்தாா்.

மேலும், கடையநல்லூா் எம்எல்ஏ அலுவலகத்தில் அவரது பெயா் திமுக வண்ணத்தில் மாற்றி எழுதப்பட்டது. இது, அக்கட்சியினா் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திமுக வா்ணத்தில் மாறிய எம்எல்ஏ பெயா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments