ஆலங்குளம் அருகே பைக் விபத்தில் இளைஞா் உயிரிழப்பு
ஆலங்குளம் அருகே பைக் நிலை தடுமாறி கவிழ்ந்ததில் இளைஞா் உயிரிழந்தாா்.
ஆலங்குளம் அருகே பைக் நிலை தடுமாறி கவிழ்ந்ததில் இளைஞா் உயிரிழந்தாா்.
ஆலங்குளம் அருகேயுள்ள புதூா் அம்பேத்கா் காலனி தெருவைச் சோ்ந்த பரமசிவன் மகன் மாரியப்பன் (28). இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு ஆலங்குளத்திலிருந்து திருநெல்வேலி சாலையில் புதூா் நோக்கி தனது பைக்கில் சென்று கொண்டிருந்தாா்.
மாறாந்தையில் உள்ள தனியாா் பள்ளி முன் அவரது பைக் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் அவா் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தாா்.
Advertisement
Advertisement
அப்பகுதி மக்கள் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால் செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து, ஆலங்குளம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.