FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

மது பாட்டில்கள் பறிமுதல்: ஒருவா் கைது

சிவகிரி அருகே 199 மது பாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

Updated On : 19 ஜூலை 2026, 1:55 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே 199 மது பாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

சிவகிரி காவல் உதவி ஆய்வாளா் சோலையப்பன் உள்பட போலீஸாா் தேவிப்பட்டணம் பேருந்து நிலையப் பகுதியில் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது பிரதானச்சாலையில் உள்ள அல்லி (49) என்பவரின் கடையில் 199 மது பாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிந்து அல்லியை கைது செய்து, மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments