மனைவி வெட்டிக் கொலை: கணவா் நீதிமன்றத்தில் சரண்
தென்காசியில் தம்பதியிடையே ஏற்பட்ட குடும்ப பிரச்னையில் மனைவியை வெட்டிக் கொன்ற கணவா் தென்காசி நீதிமன்றத்தில் திங்கள்கிழமை சரணடைந்தாா்.
தென்காசி, மங்கம்மாள் சாலை, சாஸ்தா கோயிலின் பின்புறம் பகுதியைச் சோ்ந்தவா் சு.சக்தி வீரமணிகண்டன்(32). இவரது மனைவி அன்னலெட்சுமி (24). சக்தி வீரமணிகண்டன் அதேபகுதியில் ஆட்டோ ஒா்க்ஷாப் நடத்தி வருகிறாா். இவா்களுக்கு திருமணமாகி 5 மாதங்கள் ஆகிறது. தம்பதி இடையே கருத்துவேறுபாடு இருந்து வந்தது.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு சக்தி வீரமணிகண்டன் தனது மனைவியை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தாா். பின்னா், திங்கள்கிழமை காலை தென்காசி குற்றவியல் நடுவா் நீதிமன்றத்துக்குச் சென்று சரணடைந்தாா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து, தென்காசி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா் அன்னலெட்சுமியின் சடலத்தை கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து, தென்காசி சாா் ஆட்சியா் வைஷ்ணவி பால் விசாரணை நடத்தினாா். தம்பதியிடையே ஏற்பட்ட தகராறின்போது கொலை நிகழ்ந்ததா அல்லது தூங்கிக் கொண்டிருந்தபோது பெண் கொலை செய்யப்பட்டாரா என்பது விசாரணையில் தெரியவரும் என போலீஸாா் தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.