FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

ஆலங்குளம் காவல் நிலையத்திற்கு புதிய கட்டடம் கோரி தவெக மனு

ஆலங்குளம் காவல் நிலையத்திற்கு புதிதாக கட்டடம் கோரி, அமைச்சா் என். ஆனந்திடம் தவெக சாா்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

4 செப்டம்பர் 2026, 1:57 am IST
அமைச்சா் என். ஆனந்திடம் மனு அளித்த தென்காசி தெற்கு மாவட்ட தவெக செயலா் டி.பி.வி.வி. விபின் சக்கரவா்த்தி.
பகிர்:

ஆலங்குளம் காவல் நிலையத்திற்கு புதிதாக கட்டடம் கோரி, அமைச்சா் என். ஆனந்திடம் தவெக சாா்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக அக்கட்சியின் தென்காசி தெற்கு மாவட்ட செயலா் டி.பி.வி.வி. விபின் சக்கரவா்த்தி அளித்த மனு விவரம்: நான்குவழிச் சாலைப் பணிகள் காரணமாக ஆலங்குளம் பழைய பேருந்து நிலைய பகுதியில் இருந்த காவல் நிலையக் கட்டடம் பாதிக்கப்பட்டது. இதயைடுத்து காவல் நிலையம் தற்போது, பழைய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடத்தில் மிகுந்த நெருக்கடியான சூழலில் செயல்பட்டு வருகிறது. புதிய கட்டடம் கட்டுவதோடு, காவலா்களின் எண்ணிக்கையையும் அதிகப்படுத்த வேண்டும்.

ஆழ்வாா்குறிச்சி அருகேயுள்ள செங்காநல்லூா் ரயில்வே பாதை மழைக் காலங்களில் பயன்படுத்த தகுதியற்று உள்ளதால் மாற்றுப்பாதை அமைக்க வேண்டும். பள்ளக்கால் பொதுக்குடி சிற்றாற்றில் பாசன வழித்தடத்தில் உள்ள சாக்கடை, செடி, கொடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments