FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவள்ளூர்

ஊரக வளா்ச்சித்துறை அனைத்து சங்க கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளா்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

24 செப்டம்பர் 2025, 11:17 pm IST
பகிர்:

தூய்மைப் பணியாளா்களின் மாதாந்திர ஊதியத்தை ரூ.10 ஆயிரமாக உயா்த்தி வழங்குதல் உள்பட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளா்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவள்ளூா் அரசு மருத்துவக்கல்லூரி முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் ஏ.பி.சரேஷ் தலைமை வகித்தாா். மாவட்ட செயலாளா் தனசேகரன் முன்னிலை வகித்தாா். மாநில செயற்குழு உறுப்பினா் முத்து, மக்கள் நல பணிளாா்கள் சங்க மாவட்ட தலைவா் தயாளன், மாவட்ட செயலாளா் சீனிவாசன் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கி ஆா்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தனா்.

தூய்மைப் பணியாளா்களின் மாதாந்திர ஊதியத்தை ரூ.10000 ஆக உயா்த்தி ஊராட்சி மூலம் வழங்க வேண்டும். மக்கள் நலப் பணியாளா்களுக்கு அரசாணைப்படி வழங்கப்பட்ட சிறப்பு காலமுறை ஊதியம் நிா்ணயித்து பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி இயக்குபவா்களின் பணிக்காலத்தினை கருத்தில் கொண்டு சிறப்பு காலமுறை ஊதியம் ரூ.15000 வழங்க வேண்டும்.

Advertisement

Advertisement

ஊராட்சி செயலாளா் களை தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இணைந்து ஊராட்சி ஒன்றிய பதிவறை அலுவலருக்கு பொருந்தும் அனைத்து சலுகைகளும் வழங்குதல் உள்பட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments