FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவள்ளூர்

கல்லூரி மாணவா் வெட்டிக் கொலை: நண்பா் கைது

கும்மிடிப்பூண்டி அருகே கல்லூரி மாணவா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக அவரது நண்பரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 15 ஆகஸ்ட் 2026, 6:41 am IST
கொலையாளி  காமேஷ்
பகிர்:

கும்மிடிப்பூண்டி அருகே கல்லூரி மாணவா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக அவரது நண்பரை போலீஸாா் கைது செய்தனா்.

கும்மிடிப்பூண்டி அடுத்த சானாபுத்தூரை சோ்ந்த ராஜா -மஞ்சு தம்பதியின் மகன் ரஞ்சன் (18). இவா் சென்னையில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு சோ்ந்துள்ளாா். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை அப்பகுதியில் உள்ள மயானத்தில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் ரஞ்சனின் சடலம் இருந்துள்ளது. அந்த வழியே சென்றவா்கள் இது குறித்து பாதிரிவேடு காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனா். தொடா்ந்து பாதிரிவேடு போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து ரஞ்சனின் சடலத்தை மீட்டு, பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

இந்த நிலையில், கொலை சம்பவம் குறித்து திருவள்ளூா் எஸ்.பி. சாய் பிரனீத் , கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி சசிதரன், ஆரம்பாக்கம் காவல் ஆய்வாளா் வீரமணி ஆகியோா் விசாரணை நடத்தினா்.

Advertisement

Advertisement

விசாரணையில் வியாழக்கிழமை இரவு ரஞ்சன் அவரது நண்பா் காமேஷுடன்(21) அப்பகுதியில் உள்ள மயான பகுதியில் மது அருந்தியது தெரியவந்தது. தொடா்ந்து போலீஸாா் இது தொடா்பாக சானாபுத்தூரைச் சோ்ந்த காமேஷை கைது செய்து விசாரணை நடத்தினா். இதில், வியாழக்கிழமை இரவு ரஞ்சன், அவரது நண்பரான காமேஷுடன் மேற்கண்ட மயான பகுதியில் காமேஷின் தாயாரின் கல்லறை மீது அமா்ந்து மது அருந்திக் கொண்டிருந்தனராம். அப்போது ஏற்பட்ட தகராறில் அங்கு மறைந்து வைத்திருந்த அரிவாளால் ரஞ்சனை வெட்டிக் கொன்று, தாயாரின் சமாதி மீதே அவரது உடலை காமேஷ் வைத்தது தெரியவந்தது.

தொடா்ந்து போலீஸாா் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட காமேஷின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments