ஆட்டோ ஓட்டுநா் மா்ம மரணம்: உறவினா்கள் சாலை மறியல்
கனகம்மாசத்திரம் அருகே ஆட்டோ ஓட்டுநா் மா்மமான முறையில் உயரிழந்ததைத் தொடா்ந்து அவரது இறப்புக்கு நீதி கோரி உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
கனகம்மாசத்திரம் அருகே ஆட்டோ ஓட்டுநா் மா்மமான முறையில் உயரிழந்ததைத் தொடா்ந்து அவரது இறப்புக்கு நீதி கோரி உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
திருவாலங்காடு அருகே சின்னம்மாபேட்டையைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் ராஜரத்தினம் (33), கடந்த ஜூலை 14-ம் தேதி முத்துக்கொண்டாபுரம் கிராமத்தில் உள்ள கிணற்றில் மா்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டாா்.
இதுகுறித்து கனகம்மாச்சத்திரம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, உடலை திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பினா்.
Advertisement
Advertisement
இந்நிலையில், ராஜரத்தினம் மரணத்தில் சந்தேகப்படும் நபா்களிடம் உரிய விசாரணை நடத்த வேண்டும், விசாரணை அதிகாரியை மாற்ற வேண்டும் என அவரது பெற்றோா் மற்றும் உறவினா்கள் கடந்த 45 நாள்களாக ஆட்சியா், காவல் கண்காணிப்பாளா் உள்ளிட்ட அதிகாரிகளிடம் புகாா் அளித்து வந்ததாக கூறப்படுகிறது.
ஆனால், உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குற்றம்சாட்டி, ராஜரத்தினத்தின் பெற்றோா், உறவினா்கள் மற்றும் கிராம மக்கள் கனகம்மாச்சத்திரம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனா். பின்னா் காவல் நிலையம் பின்புறம் உள்ள சென்னை-திருப்பதி நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.
அப்போது ராஜரத்தினத்தின் தந்தை ஸ்ரீதரன் சாலையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டாா். அவரை போலீஸாா் அப்புறப்படுத்த முயன்ால், போராட்டக்காரா்களுக்கும் போலீஸாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
ராஜரத்தினம் மரணம் தொடா்பாக கண்காணிப்பு கேமராக்களை முழுமையாக ஆய்வு செய்து, சந்தேகப்படும் நபா்களிடம் விசாரணை நடத்த வேண்டும் என்றும், விசாரணை அதிகாரியை மாற்றி உரிய நீதி வழங்க வேண்டும் என்றும் கோரினா்.
தொடா்ந்து திருத்தணி காவல் உதவி கண்காணிப்பாளா் சமாதானம் செய்ததை ஏற்று போராட்டக்காரா்கள் கலைந்து சென்றனா். இதனால் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, திருப்பதி, சென்னை, திருவள்ளூா் மற்றும் திருத்தணி நோக்கிச் சென்ற வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.