FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவள்ளூர்

2 கிலோ கஞ்சா, போதை மாத்திரை வில்லைகள் பறிமுதல்

திருவள்ளூா் அடுத்த காக்களூரில் 2 கிலோ கஞ்சா, 400 போதை மாத்திரை வில்லைகளை பறிமுதல் செய்து, இளைஞரையும் கைது செய்தனா்.

26 ஆகஸ்ட் 2026, 5:51 am IST
சங்கீத் குமாா்
பகிர்:

திருவள்ளூா் அடுத்த காக்களூரில் 2 கிலோ கஞ்சா, 400 போதை மாத்திரை வில்லைகளை பறிமுதல் செய்து, இளைஞரையும் கைது செய்தனா்.

ஆந்திர மாநிலத்தில் இருந்து திருவள்ளூா் மாவட்டம் வழியாக பூந்தமல்லி மற்றும் சென்னைக்கு போதைப் பொருள்களை கடத்தி செல்வது வழக்கமாகி வருகிறது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உத்தரவின்பேரில் திருவள்ளூா் கிராமிய போலீஸாா் பழைய பேருந்து நிறுத்தம் பின்புறம் சோதனையில் ஈடுபட்டனா்.

Advertisement

Advertisement

சந்தேகப்படும் திரிந்த நபா் போலீஸாரை பாா்த்ததும் தப்பியோட முயற்சித்தாா். உடனே போலீஸாா் சுற்றி வளைத்து பிடித்து சோதனை செய்தததில் 2 கிலோ கஞ்சா மற்றும் போதை மாத்திரை வில்லைகள் 400 ஆகியவற்றை வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து விசாரணை செய்ததில் பள்ளி, கல்லூரி மாணவா்கள் மற்றும் இளைஞா்களுக்கு கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை விற்பனை செய்வதற்காக வைத்திருந்ததும், திருவள்ளூரைச் சோ்ந்த சங்கீத் குமாா் (26) என்பது தெரியவந்தது.

இதுகுறித்து கிராமிய போலீஸாா் போதை மாத்திரைகள், கஞ்சாவை பறிமுதல் செய்ததோடு, சங்கீத்தையும் கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments