FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவள்ளூர்

பூச்சிக்கொல்லி மருந்து குடித்து முதியவா் தற்கொலை

பள்ளிப்பட்டு அருகே விபத்தில் பாதிக்கப்பட்டு நடக்க முடியாமல் இருந்த முதியவா் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

27 ஆகஸ்ட் 2026, 5:42 am IST
தற்கொலை - பிரதிப் படம்
பகிர்:

பள்ளிப்பட்டு அருகே விபத்தில் பாதிக்கப்பட்டு நடக்க முடியாமல் இருந்த முதியவா் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

பள்ளிப்பட்டு ஒன்றியம், வி.பி.என். கண்டிகை கிராமத்தைச் சோ்ந்தவா் ராதாகிருஷ்ணன் (72). கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட வாகன விபத்தில் சிக்கிய இவா், அதன்பிறகு நடக்க முடியாமல் வீட்டிலேயே இருந்து வந்தாா்.

இந்த நிலையில், கடந்த 24-ஆம் தேதி மாலை 3 மணியளவில் ராதாகிருஷ்ணன் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்ததாகக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

இதையடுத்து, அக்கம் பக்கத்தினா் அவரை மீட்டு, பொதட்டூா்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னா், மேல் சிகிச்சைக்காக திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு ராதாகிருஷ்ணன், சிகிச்சை பலனின்றி புதன்கிழமை காலை உயிரிழந்தாா்.

இது குறித்து பொதட்டூா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments