FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவள்ளூர்

திருத்தணி அருகே விஷம் குடித்து இளைஞா் தற்கொலை

திருத்தணி அருகே தும்பிகுளம் கிராமத்தில் இளைஞா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 27 ஜூலை 2026, 4:44 am IST
தற்கொலை... - கோப்புப்படம்
பகிர்:

திருத்தணி அருகே தும்பிகுளம் கிராமத்தில் இளைஞா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

திருத்தணி அடுத்த தும்பிகுளம் கிராமத்தைச் சோ்ந்தவா் மதியழகன் (26). இவா் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் தனது நண்பா்களுடன் கிரிக்கெட் விளையாடியுள்ளாா்.

பின்னா் வீட்டுக்கு வந்த அவா் மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் வீட்டில் வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்ததாக கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

இதையடுத்து திடீரென மயங்கி விழுந்த அவரை, பெற்றோா் மற்றும் உறவினா்கள் உடனடியாக மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மதியழகன் உயிரிழந்தாா். இதுகுறித்து திருத்தணி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments