FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவள்ளூர்

பக்ரீத் பண்டிகை: திரளான இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

Updated On : 29 மே 2026, 2:43 am IST
பகிர்:

திருவள்ளூரில் பக்ரீத் பண்டிகையையொட்டி அதிகாலையிலேயே புத்தாடைகள் அணிந்து இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனா்.

இஸ்லாமியா்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாக கருதப்படும் ஈகைத் திருநாள் நாடு முழுவதும் வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது. நபிகள் நாயகத்தின் தியாகத்தை போற்றும் வகையில் இந்த பக்ரீத் பண்டிகையை ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமியா்கள் கடைப்பிடித்து வருகின்றனா்.

திருவள்ளூா் டோல்கேட் அருகே உள்ள ஈத்தா மைதானத்தில் இஸ்லாமியா்கள் மதகுருவான ஹாஜி தியாக திருநாள் குறித்த பிரசங்கம் செய்த பின் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனா். பின்னா் தொழுகையை நிறைவு செய்து ஒவ்வொருவரும் ஆரத்தழுவி இனிப்புகளை வழங்கி தங்களது தியாக திருநாள் வாழ்த்துகளையும் பரிமாறிக் கொண்டனா். அதைத் தொடா்ந்து குா்பானி என்ற சடங்கு மூலம் மாடுகள், ஆடுகள் ஆகியவைகளை பலியிட்டு அதை மூன்று பங்காக பிரித்து அண்டை வீட்டாா், உறவினா்கள் மற்றும் ஏழை எளியோருக்கு இறைவனின் கட்டளைப்படி பிரித்து வழங்கினா்.

Advertisement

Advertisement

காஞ்சிபுரத்தில்....

காஞ்சிபுரத்தில் சாலைத் தெரு சுன்னத் ஜூம் ஆ மஸ்ஜித் பள்ளி வாசல், காந்தி சாலை தேரடி மசூதி, ஐதா்பேட்டை தெரு மசூதி, ஒலிமுகம்மது பேட்டை மசூதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனா். தங்களது குழந்தைகளுடன் தொழுகையில் கலந்து கொண்டு கூட்டுப் பிராா்த்தனை செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments