ஃபேஷன் ஷோவில் இடம்பெற்ற ஆரெம்கேவி- யின் தனித்துவ புடவைகள்
பட்டு நெசவில் பல புதுமைகளை செய்து வரும் ஆரெம்கேவியின் தனித்துவ புடவைகள் லாக்மி நிறுவனத்தின் 2018-ஆம் ஆண்டின் லாக்மி ஃபேஷன் ஷோ'வில் இடம்பெற்றன.
பட்டு நெசவில் பல புதுமைகளை செய்து வரும் ஆரெம்கேவியின் தனித்துவ புடவைகள் லாக்மி நிறுவனத்தின் 2018-ஆம் ஆண்டின் லாக்மி ஃபேஷன் ஷோ'வில் இடம்பெற்றன.
கோர்ட்யார்ட் எனும் மிக அழகான சூழலில் நடத்தப்பட்ட இந்த ஃபேஷன் ஷோவில் ஆரெம்கேவியின் 25 வகையான ஜொலித்திடும் பட்டுப் புடவைகளும், அதன் சிறப்புமிக்க துணி வகைகளைக் கொண்டு சுனிதா சங்கர் வடிவமைத்த 12 ஆடை வகைகளும் இடம்பெற்றன.
இது தொடர்பாக ஆரெம்கேவி சில்க்ஸ் மேலாண்மை இயக்குநர் கே.சிவகுமார் பேசும்போது, பாரம்பரியமும், நவீனமும் சரியாக இணைக்கப்பட்டு புதிய தொழில்நுட்ப வழிகளை புகுத்தி ஒரு பிரம்மாண்ட, தனித்துவமான ஆடைகள், கைத்தறி பட்டுத் துணிகளை உருவாக்க பாடுபட்டு வந்தோம். இந்த புதிய அறிமுகம் எங்களுக்கு மிகப் பெரிய வெற்றியையும், வளர்ச்சியையும் அளிக்கும்' என்றார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.