டயலொக் அக்சியாட்டாவுடன் இணைப்பதற்கான ஒப்பந்தத்தில் ஏர்டெல் கையொப்பம்!
தொலைத்தொடர்பு ஆபரேட்டர் பார்தி ஏர்டெல் தனது இலங்கை செயல்பாடுகளை டையலாக் அக்சியாட்டாவுடன் (Dialog Axiata) இணைக்க ஒப்பந்தம் செய்துள்ளது.
புதுதில்லி: தொலைத்தொடர்பு ஆபரேட்டர் பார்தி ஏர்டெல் தனது இலங்கை செயல்பாடுகளை டையலாக் அக்சியாட்டாவுடன் (Dialog Axiata) இணைக்க ஒப்பந்தம் செய்துள்ளது.
ஏர்டெல்லின் துணை நிறுவனமான பார்தி ஏர்டெல் லங்கா பிரைவேட் லிமிடெட் மற்றும் அக்சியாட்டா குரூப் பெர்ஹாட்டின் துணை நிறுவனமான டையலாக் மற்றும் பார்தி ஏர்டெல் லிமிடெட் ஆகியவற்றின் செயல்பாடுகளை இணைக்க டையலாக் அக்சியாட்டா, ஆக்சியாட்டா குரூப் பெர்ஹாட் மற்றும் பார்தி ஏர்டெல் லிமிடெட் ஆகியவை ஒருங்கிணைந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன என்று ஏர்டெல் தனது ஒழுங்குமுறை அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த பரிவர்த்தனை முடிந்ததும் ஏர்டெல் டயலொக்கில் புதிய பங்குகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.