டிசிஎஸ் நிறுவனத்துக்கு புதிய சிஇஓ நியமனம்!
டிசிஎஸ் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக கே. கீர்த்திவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
டிசிஎஸ் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக கே. கீர்த்திவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். 20 ஆண்டுகளுக்கும் மேலாக தலைமை செயல் அதிகாரியாக இருந்த ராஜேஷ்கோபிநாதன் இன்று (மே 31) அப்பதவியிலிருந்து விலகுவதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
டாடா குழுமத்துக்குச் சொந்தமான டிசிஎஸ் நிறுவனம், 150க்கும் மேற்பட்ட இடங்களில் அலுவலகங்களை நிறுவி மென்பொருள் துறையில் கோலோச்சி வருகிறது.
இந்நிறுவனத்தில் 6 லட்சத்துக்கும் அதிகமானோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாகவும் மேலாண்மை இயக்குநராகவும் இருந்தவர் ராஜேஷ் கோபிநாதன். 20 ஆண்டுகளுக்கும் மேலாக டிசிஎஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.
Advertisement
Advertisement
தற்போது சிஇஓ பொறுப்பிலிருந்து அவர் விலகியுள்ளார். ஊழியர்களுக்கு பொறுப்பு விலகல் குறித்து கடிதம் அனுப்பியுள்ள அவர், கடந்த 6 ஆண்டுகளாக நமது நிறுவனத்தை வழிநடத்தியது பெருமை அளிக்கிறது. ஏனெனில் அந்த காலகட்டத்தில் நம் வளர்ச்சியும் ஏற்பட்ட மாற்றங்களும் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
ராஜேஷ் கோபிநாதனுக்கு அடுத்து டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக கே. கீர்த்திவாசன் தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.