பங்குச்சந்தை வணிகம் இரண்டாவது நாளாக இன்று (ஆக. 13) சரிவுடன் முடிந்தது. சென்செக்ஸ் 692 புள்ளிகளும் நிஃப்டி 208 புள்ளிகளும் சரிவுடன் முடிந்தன.
பங்குச்சந்தை வணிகம் இரண்டாவது நாளாக இன்று (ஆக. 13) சரிவுடன் முடிந்தது. சென்செக்ஸ் 692 புள்ளிகளும் நிஃப்டி 208 புள்ளிகளும் சரிவுடன் முடிந்தன.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 692.89 புள்ளிகள் சரிந்து 78,956.03 புள்ளிகளாக வணிகம் நிறைவு பெற்றது. மொத்த வணிகத்தில் இது 0.87 சதவீதம் சரிவாகும்.
தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 208 புள்ளிகள் சரிந்து 24,139 புள்ளிகளாக நிறைவு பெற்றது. இது மொத்த வணிகத்தில் 0.85 சதவீதம் சரிவாகும்.
வணிகத்தின் தொடக்கத்தில் 79,552 புள்ளிகளாக தொடங்கிய சென்செக்ஸ், 78,889.38 வரை சென்றது. இது இன்றைய நாளின் அதிகபட்ச சரிவாகும். நாளின் பிற்பாதியில் சற்று உயர்ந்து 79,692.55 என்ற இன்றைய நாளின் உச்சத்தை எட்டியது.
பின்னர் 750 புள்ளிகள் வரை சரிந்து 78,956.03 புள்ளிகளாக வணிகம் நிறைவு பெற்றது.
சென்செக்ஸ் பட்டியலிலுள்ள முதல் 30 தரப் பங்குகளில், 21 நிறுவன பங்குகள் சரிவுடன் இருந்தன. எஞ்சிய 9 நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே உயர்வுடன் காணப்பட்டன.
டைட்டன் கம்பெனி 1.89%, எச்.சி.எல். டெக் 0.47%, நெஸ்ட்லே இந்தியா 0.47%, சன் பார்மா 0.37%, ரிலையன்ஸ் 0.21%, பார்தி ஏர்டெல் 0.08%, டிசிஎஸ் 0.04%, எம்&எம் 0.02%, இன்ஃபோசிஸ் 0.01% உயர்ந்திருந்தன.
அதிகபட்ச சரிவாக எச்.டி.எஃப்.சி. -3.43%, பஜாஜ் ஃபைனான்ஸ் -2.17%, டாடா மோட்டார்ஸ் -2.11%, டாடா ஸ்டீல் -2.10%, எஸ்.பி.ஐ. -1.86% சரிந்திருந்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.