FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

உறுதியான குறியீடுகளால் சென்செக்ஸ், நிஃப்டி கிட்டத்தட்ட 1% உயர்வுடன் முடிவு!

மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 631.55 புள்ளிகள் உயர்ந்து 76,532.96 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 205.85 புள்ளிகள் உயர்ந்து 23,163.10 புள்ளிகளாக நிலைபெற்றது.

Updated On : 29 ஜனவரி 2025, 5:26 pm IST
சித்தரிக்கப்பட்டது | கோப்புப் படம்
பகிர்:

மும்பை: சர்வதேச சந்தைகளின் உறுதியான போக்குக்கு மத்தியில் ஐடி, மூலதன பொருட்கள் மற்றும் தொழில்துறை பங்குகள் உயர்வால் உற்சாகமடைந்த பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இன்று கிட்டத்தட்ட 1 சதவிகிதம் வரை உயர்ந்து முடிந்தது.

இன்றைய காலை நேர வர்த்தகத்தில் சென்செக்ஸ் 698.32 புள்ளிகள் உயர்ந்து 76,599.73 புள்ளிகளாக வர்த்தகமானது. வர்த்தக முடிவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 631.55 புள்ளிகள் உயர்ந்து 76,532.96 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 205.85 புள்ளிகள் உயர்ந்து 23,163.10 புள்ளிகளாக நிலைபெற்றது.

30 பங்குகள் கொண்ட ப்ளூ சிப் பேக்கில் சோமேட்டோ பங்குகள் இன்று சுமார் 7 சதவிகிதம் உயர்ந்தது. டாடா மோட்டார்ஸ், இன்போசிஸ், அல்ட்ராடெக் சிமெண்ட், டெக் மஹிந்திரா, மஹிந்திரா & மஹிந்திரா, பஜாஜ் பைனான்ஸ் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்து முடிந்தது. இதற்கு நேர்மாறாக ஐடிசி ஹோட்டல்கள், பார்தி ஏர்டெல், மாருதி, ஏசியன் பெயிண்ட்ஸ் மற்றும் ஐடிசி ஆகியவை சரிந்து முடிந்தது.

Advertisement

Advertisement

நிஃப்டி குறியீட்டில் டிரென்ட், ஸ்ரீராம் பைனான்ஸ், பாரத் எலக்ட்ரானிக்ஸ், டாடா மோட்டார்ஸ், எஸ்பிஐ லைஃப் உள்ளிட்ட பங்குகள் 3 முதல் 4 சதவிகிதம் வரை உயர்ந்தது. மாருதி சுசூகி, பாரதி ஏர்டெல், பிரிட்டானியா, ஏசியன் பெயிண்ட்ஸ், ஐடிசி பங்குகள் 0.5 முதல் 1 சதவிகிதம் வரை சரிந்தது.

இதையும் படிக்க:பங்கு பரஸ்பர நிதித் திட்டங்களில் முதலீட்டு வரத்து 14% உயா்வு

பிஎஸ்இ-யில் வர்த்தகம் செய்யப்பட்ட மொத்தம் 2,909 பங்குகளில் 528 பங்குகள் சரிந்தும் 2,311 பங்குகளுக்கு உயர்ந்தும் 70 பங்குகள் மாற்றமின்றி வர்த்தகமாயின. 14 பங்குகள் 52 வார உச்சத்தையும், 98 பங்குகள் 52 வார குறைந்த விலையையும் தொட்டது.

ஆசிய சந்தைகளில் இன்று சியோல் மற்றும் டோக்கியோ சற்று உயர்ந்த நிலையில், ஷாங்காய் மற்றும் ஹாங்காங் சந்தைகள் விடுமுறை காரணமாக மூடப்பட்டிருந்தன.

ஐரோப்பிய சந்தைகள் பெரும்பாலும் உயர்ந்து வர்த்தகமானது. அமெரிக்க சந்தைகள் நேற்று (செவ்வாய்க்கிழமை) உயர்வுடன் முடிவடைந்தது.

அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று (செவ்வாய்க்கிழமை) ரூ.4,920.69 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ளனர்.

உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 0.93 சதவிகிதம் சரிந்து 76.77 அமெரிக்க டாலராக உள்ளது.

இதையும் படிக்க: டாக்டா் அகா்வால்ஸ் ஹெல்த் கோ் பொதுப் பங்குகள் இன்று வெளியீடு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments