எடர்னல் 
வணிகம்

15% ஏற்றத்துடன் வெற்றி ஓட்டத்தில் எடர்னல்!

காலாண்டு வருவாய்க்கு பிறகு, ஜொமாடோ மற்றும் பிளிங்கிட் பிராண்டுகளுக்குச் சொந்தமான உணவு விநியோக மற்றும் விரைவு வர்த்தக நிறுவனமான எடர்னல் பங்குகள் சுமார் 15 சதவிகிதம் உயர்ந்தன.

இணையதளச் செய்திப் பிரிவு

புதுதில்லி: ஜூன் வரையான காலாண்டு வருவாய்க்கு பிறகு, ஜொமாடோ மற்றும் பிளிங்கிட் பிராண்டுகளுக்குச் சொந்தமான உணவு விநியோக மற்றும் விரைவு வர்த்தக நிறுவனமான எடர்னல் பங்குகள் சுமார் 15 சதவிகிதம் உயர்ந்தன.

பிஎஸ்இ-யில் பங்கின் விலை 14.89 சதவிகிதம் உயர்ந்து ரூ.311.60 ஆக இருந்தது. இது 52 வாரத்தின் அதிகபட்சம் விலையாகும்.

என்எஸ்இ-யில் இதன் விலை 14.55 சதவிகிதம் உயர்ந்து ரூ.311.25 ஐ எட்டியது. நேற்றைய வர்த்தகத்தில் எடர்னல் பங்குகள் கிட்டத்தட்ட 6 சதவிகிதம் உயர்ந்தன.

எடர்னல் மீண்டும் எங்களை ஆச்சரியப்படுத்தியது என்றது பிளிங்கிட். 2024-25ஆம் ஆண்டின் 4வது காலாண்டு பிறகு எச்சரிக்கையான தொனிக்கு முற்றிலும் மாறுபட்டதாக இருப்பதாக ஜே.எம். பைனான்சியல் இன்ஸ்டிடியூஷனல் செக்யூரிட்டீஸ் லிமிடெட் தெரிவித்தது.

ஜூன் வரையான காலாண்டில் எடர்னல் ரூ.25 கோடி ஒருங்கிணைந்த நிகர லாபத்தை ஈட்டியதாக அறிவித்தது. கடந்த மார்ச் மாதத்தில் எடர்னல் என பெயரை மாற்றிகொண்ட இந்த நிறுவனம், முந்தைய ஆண்டு இதே காலத்தில் ரூ.253 கோடி நிகர லாபத்தை ஈட்டியது.

மதிப்பாய்வு செய்யப்பட்ட காலாண்டில், செயல்பாடுகளிலிருந்து நிறுவனத்தின் வருவாய் ரூ.7,167 கோடியாக இருந்தது. இதுவே ஒரு வருடத்திற்கு முன்பு ரூ.4,206 கோடியாக இருந்தது.

இதையும் படிக்க: சோலெக்ஸ் எனர்ஜியின் வருவாய் 84% அதிகரிப்பு!

Shares of food delivery and quick commerce firm Eternal, which owns the Zomato and Blinkit brands, on Tuesday jumped nearly 15 per cent after its June quarter earnings announcement.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காஞ்சிபுரம் டிஎஸ்பி கைது: மேல்முறையீட்டு மனு இன்று பிற்பகல் விசாரணை!

சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ஜெகன் மோகன் ஆதரவு! துரோகத்தை வரலாறு மறக்காது! - காங்கிரஸ்

காஞ்சிபுரத்தில் ரூ. 254 கோடியில் நலத்திட்ட உதவிகள்: துணை முதல்வர் உதயநிதி வழங்கினார்!

நேபாளத்தில் உள்ள இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்!

தவெகவைக் கண்டு பயத்தின் உச்சத்தில் இருக்கிறது திமுக: விஜய்

SCROLL FOR NEXT