அதீத பேட்டரி திறனுடன் வெளியான ஓப்போ எஃப்33, எஃப்33 ப்ரோ!
ஓப்போ எஃப்33, எஃப்33 ப்ரோ ஆகிய இரு ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் இன்று (ஏப். 15) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது குறித்து...
ஓப்போ எஃப்33, எஃப்33 ப்ரோ ஆகிய இரு ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் இன்று (ஏப். 15) அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அதீத பேட்டரி மற்றும் கேம்ரா திறனுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த ஸ்மார்ட்போன்கள் தயரிக்கப்பட்டுள்ளன.
சீனாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஓப்போ நிறுவனம் இந்திய பயனர்களைக் கவரும் வகையிலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது.
அந்தவகையில் ஓப்போ எஃப்33, எஃப்33 ப்ரோ ஆகிய இரு ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. மத்திய ரக விலையில் அறிமுகமாகியுள்ள இந்த ஸ்மார்ட்போன்கள் குறித்த சிறப்புகளை பார்க்கலாம்.
Advertisement
ஓப்போ எஃப்33, எஃப்33 ப்ரோ சிறப்பம்சங்கள்
இரு ஸ்மார்ட்போன்களும் 7,000mAh பேட்டரி திறனுடன் தயாரிக்கப்பட்டுள்ளன. வேகமாக சார்ஜ் ஆகும் வகையில் ரிவர்ஸ் சார்ஜிங் அம்சமும் உள்ளது.
பின்புறம் 50MP முதன்மை கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இது இரண்டாவத் லென்ஸ் சென்சாருடன் இணைக்கப்பட்டுள்ளது. இதனால், அடிப்படையான புகைப்படங்களுக்கும் அதிதிறன் வாய்ந்த புகைப்படங்களுக்கும் அதிக வேறுபாடுகள் இருக்காது.
ஓப்போ கலர் ஓஎஸ் ஆண்டிராய்டு உடையவை.
எனினும், ஓப்போ எஃப்33 ப்ரோ மாடலில், 6.57 அங்குல அமோலிட் திரை கொடுக்கப்பட்டுள்ளது.
நீர் மற்றும் தூசி புகாத்தன்மையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
முன்பக்க செல்ஃபி கேமரா கூடுதல் திறனுடன் தயாரிக்கப்பட்டுள்ளது.
வண்ணங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
6GB + 128GB நினைவகம் உடைய எஃப் 33 ஸ்மார்ட்போன் விலை ரூ. 31,999.
8GB + 128GB நினைவகம் உடைய எஃப் 33 ஸ்மார்ட்போன் விலை ரூ. 34,999.
8GB + 256GB நினைவகம் உடைய எஃப் 33 ஸ்மார்ட்போன் விலை ரூ. 39,999..
இதேபோன்று 8GB + 128GB நினைவகம் உடைய எஃப் 33 ப்ரோ விலை ரூ. 37,999
8GB + 256GB நினைவகம் உடைய எஃப் 33 ப்ரோ விலை ரூ. 40,999