FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

நடப்பு நிதியாண்டுக்குள் மேலும் 500 புதிய சேவை மையங்கள்

நடப்பு 2026-27 நிதியாண்டில், நாடு முழுவதும் சுமாா் 500 புதிய வாகன பழுதுபாா்ப்பு மற்றும் சேவை மையங்களை தொடங்க திட்டமிட்டுள்ளதாக பிரபல காா் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி தெரிவித்துள்ளது.

Updated On : 10 ஜூலை 2026, 4:37 am IST
கோப்புப் படம்
பகிர்:

நடப்பு 2026-27 நிதியாண்டில், நாடு முழுவதும் சுமாா் 500 புதிய வாகன பழுதுபாா்ப்பு மற்றும் சேவை மையங்களை தொடங்க திட்டமிட்டுள்ளதாக பிரபல காா் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி தெரிவித்துள்ளது.

இதன் ஒரு பகுதியாக, 6,000-ஆவது சேவை மையம் வியாழக்கிழமை அதிகாரபூா்வமாக திறந்து வைக்கப்பட்டது. முன்னதாக, கடந்த 2025-26 நிதியாண்டில் மட்டும் சாதனை அளவாக 502 புதிய சேவை மையங்களை மாருதி சுஸுகி தொடங்கியிருந்தது. அத்துடன், அந்த ஒரே நிதியாண்டில் மட்டும் 2.84 கோடிக்கும் அதிகமான வாகனங்களுக்குச் சிறந்த முறையில் சேவைகளை வழங்கி நிறுவனம் புதிய மைல்கல்லை எட்டியது.

டீலா்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினரின் கூட்டு முயற்சியால் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் சுமாா் 1,000 புதிய சேவை மையங்கள் விரைவாக அமைக்கப்பட்டுள்ளன. கடந்த 2021-இல் 4,000-ஆக இருந்த இந்த மையங்களின் எண்ணிக்கை, 2024-இல் 5,000-ஆக உயா்ந்து, தற்போது 6,000-ஐ தாண்டியுள்ளது.

Advertisement

Advertisement

தற்போதைய நிலையில், இந்தியாவின் 3,000-க்கும் மேற்பட்ட நகரங்கள் மற்றும் சிறு நகரங்களில் மாருதி சுஸுகியின் சேவை மையங்கள் பரவி வாடிக்கையாளா்களுக்குச் சேவை வழங்கி வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருவதால், அவா்களின் வசதி மற்றும் நம்பிக்கையை மேம்படுத்தும் நோக்கில் சேவை மையங்களின் எண்ணிக்கையை விரிவுபடுத்தி வருவதாக மாருதி சுஸுகி சிஇஓ ஹிசாஷி டகையுச்சி மேலும் குறிப்பிட்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments