கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!
இன்றைய அந்நியச் செலாவணி சந்தையில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிலைபெற்றது.
மும்பை: கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் அரசியல் பதற்றங்கள் காரணமாக, இன்றைய அந்நியச் செலாவணி சந்தையில், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிலைபெற்றது.
மீண்டும், மீண்டும் எழும் பதற்றங்கள் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு உள்ளிட்டவையால், முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளை நோக்கி சென்றதும், டாலருக்கான தேவை அதிகரித்தது, ரூபாய் மீதான அழுத்தம் ஏற்படுத்தியதாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
வங்கிகளுக்கு இடையிலான அந்நிய செலாவணி சந்தையில், ரூபாய் மதிப்பு ரூ. 95.95 ஆக தொடங்கி, அதன் முந்தைய நாள் முடிவிலிருந்து 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிலைபெற்றது.
Advertisement
Advertisement
நேற்றைய வர்த்தகத்தில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 30 காசுகள் சரிந்து ரூ. 95.68 ஆக நிறைவடைந்தது.
The rupee depreciated 62 paise to close at 96.30 against the US dollar on Tuesday.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.