தங்கம் விலை இன்று (மே 29) மீண்டும் உயர்வு! எவ்வளவு?
தங்கம், வெள்ளி விலை நிலவரம் பற்றி...
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை காலை சவரனுக்கு ரூ. 800 உயர்ந்துள்ளது.
சர்வதேச போர் பதற்றம், தங்கத்தின் மீதான இறக்குமதி வரி உயர்வு உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது.
இந்த வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை தங்கத்தின் சவரனுக்கு ரூ. 400 உயர்ந்து ரூ. 1,18,240-க்கும் விற்பனையானது. தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை ரூ. 117,840, புதன்கிழமை ரூ. 117,200-க்கு விற்பனையானது. நேற்று அதிரடியாக சவரனுக்கு ரூ. 1,200 குறைந்து ரூ. 1,16,000-க்கு விற்பனை செய்யப்பட்டது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை மீண்டும் சவரனுக்கு ரூ. 800 அதிகரித்துள்ளது. ஒரு கிராம் ரூ. 14,600-க்கும், ஒரு சவரன் ரூ. 1,16,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல் வெள்ளியின் விலையும் கிராமுக்கு ரூ. 5, கிலோவுக்கு ரூ. 5,000 அதிகரித்துள்ளது. ஒரு கிராம் ரூ. 290-க்கும், ஒரு கிலோ ரூ. 2,90,000-க்கும் விற்பனையாகிறது.
Gold and Silver Price - Today May 29 Trends
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.