பெட்ரோல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரி: லிட்டருக்கு ரூ. 1.5-ஆக குறைப்பு!
புதிய நடைமுறைகள் திங்கள்கிழமை (ஜூன் 1) முதல் அமலுக்கு வருகின்றன.
புது தில்லி : பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு அளித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் இடையேயான மோதல்கள் தொடா்ந்து வரும் சூழலில் உள்நாட்டில் எரிபொருள் இருப்பை உறுதிசெய்ய கொள்ளை லாபத் தடுப்பு வரி விதிக்கப்பட்டுள்ளது. அதிக விலைக்கு பெட்ரோலை வெளிநாடுகளுக்கு இந்திய நிறுவனங்கள் ஏற்றுமதி செய்வதை தடுக்கும் நோக்கில் இந்த வரி விதிப்பு நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டது.
புதிய நடைமுறைகளின்கீழ், மே 16 முதல், பெட்ரோல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரி லிட்டருக்கு ரூ.3 விதிக்கப்படுவதாகவும் டீசல் மீதான ஏற்றுமதி வரியை லிட்டருக்கு ரூ.16.5-ஆகவும் விமான எரிபொருளுக்கான வரியை லிட்டருக்கு ரூ.16-ஆக குறைப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்தது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், மத்திய அரசு சனிக்கிழமை (மே 30) இரவில் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, பெட்ரோல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரி லிட்டருக்கு ரூ. 1.5 விதிக்கப்படுவதாகவும் அதேவேளையில் டீசல் மீதான ஏற்றுமதி வரியை லிட்டருக்கு ரூ.13.5-ஆகவும் விமான எரிபொருளுக்கான வரியை லிட்டருக்கு ரூ. 9.5-ஆக குறைப்பதாகவும் அறிவித்தது.
இந்தப் புதிய நடைமுறைகள் திங்கள்கிழமை (ஜூன் 1) முதல் அமலுக்கு வருகின்றன.