பேருந்து நிறுத்த பெயர் பலகைகள் தேவை
சென்னை பாடியில் இருந்து அம்பத்தூர் வரையுள்ள பாடி லூகாஸ், எடத்தெரு, பாடி, மண்ணூர்பேட்டை ஆகிய இடங்களில் உள்ள பேருந்து நிறுத்தங்களில் பெயர்ப் பலகைகள் இல்லாததால் பயணிகள் சிரமப்படுகின்றனர்.
சென்னை பாடியில் இருந்து அம்பத்தூர் வரையுள்ள பாடி லூகாஸ், எடத்தெரு, பாடி, மண்ணூர்பேட்டை ஆகிய இடங்களில் உள்ள பேருந்து நிறுத்தங்களில் பெயர்ப் பலகைகள் இல்லாததால் பயணிகள் சிரமப்படுகின்றனர். இதனால் வெவ்வேறு இடங்களில் நின்றபடி பயணிகள் பேருந்தை நிறுத்தும்படி கை காட்டுகின்றனர். சில ஓட்டுநர்கள் பேருந்தை சட்டென்று நிறுத்தும்போது பின்னால் வரும் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதும் நிலை ஏற்படும் நிலை உள்ளது. ஆகவே, போக்குவரத்துத் துறை அதிகாரிகள் இந்தப் பேருந்து நிறுத்தங்களில் பெயர்ப் பலகை வைக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.