முகப்பு
ஆராய்ச்சிமணி

பேருந்து நிறுத்த பெயர் பலகைகள் தேவை

சென்னை பாடியில் இருந்து அம்பத்தூர் வரையுள்ள பாடி லூகாஸ், எடத்தெரு, பாடி, மண்ணூர்பேட்டை ஆகிய இடங்களில் உள்ள பேருந்து நிறுத்தங்களில் பெயர்ப் பலகைகள் இல்லாததால் பயணிகள் சிரமப்படுகின்றனர்.

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:05 PM
பகிர்:

சென்னை பாடியில் இருந்து அம்பத்தூர் வரையுள்ள பாடி லூகாஸ், எடத்தெரு, பாடி, மண்ணூர்பேட்டை ஆகிய இடங்களில் உள்ள பேருந்து நிறுத்தங்களில் பெயர்ப் பலகைகள் இல்லாததால் பயணிகள் சிரமப்படுகின்றனர். இதனால் வெவ்வேறு இடங்களில் நின்றபடி பயணிகள் பேருந்தை நிறுத்தும்படி கை காட்டுகின்றனர். சில ஓட்டுநர்கள் பேருந்தை சட்டென்று நிறுத்தும்போது பின்னால் வரும் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதும் நிலை ஏற்படும் நிலை உள்ளது. ஆகவே, போக்குவரத்துத் துறை அதிகாரிகள் இந்தப் பேருந்து நிறுத்தங்களில் பெயர்ப் பலகை வைக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.