முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 930

உனது திருவடிகளைத்..

Updated On : 29 அக்டோபர் 2018, 12:07 pm IST
பகிர்:

‘உனது திருவடிகளைத் தந்தருள வேண்டும்’ என்று கோரும் இப்பாடல் சுவாமிமலைக்கானது.

அடிக்கு ஒற்றொழித்து 24 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, இரண்டு, நான்கு, ஐந்து ஆகிய சீர்களில் நான்கு நான்கு குற்றெழுத்துகளும்; மூன்று, ஆறு ஆகிய தொங்கல் சீர்களில் இரண்டு குற்றெழுத்தும் இரண்டு நெடிலுமாய் நான்கெழுத்துகளும் அமைந்துள்ளன.

தனதன தனதன                           தனதான

Advertisement

Advertisement

நிறைமதி முகமெனு                      மொளியாலே

      நெறிவிழி கணையெனு              நிகராலே  

உறவுகொள் மடவர்க                      ளுறவாமோ

      உனதிரு வடியினி                   யருள்வாயே

மறைபயி லரிதிரு                         மருகோனே

      மருவல ரசுரர்கள்                   குலகாலா

குறமகள் தனைமண                      மருள்வோனே

      குருமலை மருவிய                 பெருமாளே

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.