முகப்பு
இந்த நாளில்...

இந்த நாளில் அன்று (07.09.1981) மதுவிலக்கை தளர்த்துவதற்காக நான் 3 கோடி லஞ்சம் வாங்கியதை கருணாநிதி நிரூபித்தால் அரசியலில் இருந்து விலகத் தயார் - எம்.ஜி.ஆர்.

தமிழ்நாட்டில் மதுவிலக்கைத் தளர்த்துவதற்காகத் தாம் ரூ.3 கோடி லஞ்சம் வாங்கியதாக கருணாநிதி கூறிவருகிறார். அந்தக் குற்றச்சாட்டை அவர் நிரூபித்தால்,

Updated On : 4 செப்டம்பர் 2015, 5:27 pm IST
பகிர்:

தமிழ்நாட்டில் மதுவிலக்கைத் தளர்த்துவதற்காகத் தாம் ரூ.3 கோடி லஞ்சம் வாங்கியதாக கருணாநிதி கூறிவருகிறார். அந்தக் குற்றச்சாட்டை அவர் நிரூபித்தால், முதலில் பதவியில் இருந்தும், அரசியலில் இருந்து தாம் விலகத் தயார் என்று முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரன் கூறினார்.

இலங்கையில் தமிழர்கள் மீது நடந்த தாக்குதல்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்க இம்மாதம் 15-ம் தேதி சென்னையில் திமுக மறியல் நடத்த திட்டமிட்டுள்ளது.

திமுகவின் மறியல் ஒழுங்கான முறையில் நடைபெறாதென அச்சம் தெரிவித்த அவர், அதனால் சட்டம் ஒழுங்குப் பிரச்னை உருவாகலாம் என்றார் அவர். இந்த மறியல் கிளர்ச்சியில் உருவாகக்கூடிய எவ்வித சட்டம் ஒழுங்கு நிலைமைக்கும் திமுக தலைவர் கருணாநிதியே முழுப்பொறுப்பும் ஏற்க வேண்டும்.

Advertisement

Advertisement

அண்ணாதுரை பிறந்த தினமான செப்டம்பர் 15-ம் தேதியன்று எதிர்ப்புத் தினமாக அனுஷ்டிக்கும் கருணாநிதியின் போக்கை அவர் கண்டித்தார்.

இலங்கைத் தமிழர்களின் நலன்களைக் காக்க இயன்ற எல்லா நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு ராஷ்டிரபதியையும், பிரதமரையும் மாநில அரசு கோரியிருப்பதாக முதலமைச்சர் கூறினார். முதல்வர் என்ற முறையில் தம்மால் இயன்ற வரை முயன்றுள்ள தாகவும் அவர் கூறினார்.

இங்கு மேற்கொள்ளக்கூடிய எந்த நடவடிக்கையாலும் இலங்கையில் நிலைமையை மோசமடையச் செய்யக்கூடாது. இலங்கையில் உள்ள தங்கள் சகோதரர்களுக்கு தங்கள் ஒன்றுபட்ட ஆதரவைத் தெரிவிக்கவே ஹர்த்தால் நடத்தப்படுகிறது என்றார் அவர்.

இலங்கையில் தங்கள் சகோதரர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களைக் கண்டிக்க தமிழ்நாட்டு மக்களுக்கு உரிமை உண்டு என்றார் முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.