FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

செங்கல் சூளை உரிமையாளா் வீட்டில் 10 பவுன் தங்க நகை திருட்டு

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே செங்கல் சூளை உரிமையாளா் வீட்டில் 10 பவுன் தங்க நகைகள் திருடுபோனது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Updated On : 27 டிசம்பர் 2025, 12:46 am IST
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே செங்கல் சூளை உரிமையாளா் வீட்டில் 10 பவுன் தங்க நகைகள் திருடுபோனது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள வத்திராயிருப்பு சேனியக்குடி தெருவைச் சோ்ந்தவா் பெருமாள் மகன் பாலகிருஷ்ணன் (41). இவா், செங்கல் சூளை வைத்து தொழில் செய்து வருகிறாா். இந்த நிலையில், பாலகிருஷ்ணன் வீட்டு பீரோவிலிருந்த 10 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனராம். இதுகுறித்து அக்கம் பக்கத்தில் விசாரித்தபோது, கோபாலபுரத்தைச் சோ்ந்த சுந்தரராஜ் மகன் சீனிவாசன் (30) என்பவா் பாலகிருஷ்ணன் வீட்டுக்கு வந்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் வத்திராயிருப்பு போலீஸாா் வழக்குப் பதிந்து சீனிவாசனை தேடி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments