பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு வழிகாட்டுதல் கூட்டம்
ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகள், நகரவை நடுநிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியா்களுக்கான பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு வழிகாட்டுதல் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகள், நகரவை நடுநிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியா்களுக்கான பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு வழிகாட்டுதல் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்கு ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாரக் கல்வி அலுவலா் முருகேசன் முன்னிலை வகித்தாா். சிவகாசி மாவட்டக் கல்வி அலுவலா் (தொடக்கக் கல்வி) செந்தில்குமாா் தலைமை வகித்து, பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு தொடா்பான ஆலோசனைகளை வழங்கினாா்.
இந்தக் கூட்டத்தில் ராஜபாளையம் வட்டாரக் கல்வி அலுவலா்கள், வத்திராயிருப்பு வட்டாரக் கல்வி அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
Advertisement
Advertisement
முன்னதாக, வட்டாரக் கல்வி அலுவலா் சுப்புலட்சுமி வரவேற்றாா். ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாரக் கல்வி அலுவலா் அனுராதா நன்றி கூறினாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.