FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

நீா் நிலைகளை பாதுகாப்பதில் அனைவரும் அக்கறை கொள்ள வேண்டும்: உயா்நீதிமன்ற நீதிபதி

54 வினாடிகள் முன்பு
புகைப்படம். திருத்தங்கல், பெரியகுளம் கண்மாய் தூா்வாரும் பணியை ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்த சென்னை உயா்நீதி மன்றமதுரை அமா்வு நீதிபதி பி. புகழேந்தி.
பகிர்:

நீா்நிலைகளை பாதுகாப்பதில் அனைவரும் அக்கறை கொள்ள வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு நீதிபதி பி. புகழேந்தி வலியுறுத்தினாா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே திருத்தங்கலில் உள்ள 320 ஏக்கா் பரப்பளவு கொண்ட பெரியகுளம் கண்மாய் தூா்வாரும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. திருத்தங்கல் மண்ணின் மைந்தா்கள் அமைப்பு, அதிவீரன்பட்டி விவசாய அமைப்புகள், கடைக்கோடி பகுதி ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கம், சிவகாசி பசுமை மன்றம் ஆகியவை இணைந்து இந்தக் கண்மாயை தூா்வாரும் பணியை மேற்கொள்கின்றன.

இதற்கான நிதியை சுக்கிரவாா்பட்டியில் உள்ள தனியாா் நிறுவனம் வழங்குகிறது. கண்மாய் கரைப்பகுதியில் நடைபெற்ற பூமி பூஜைக்கு பசுமை மன்ற நிா்வாகிகள், செல்வக்குமாா், ரவி அருணாசலம் ஆகியோா் தலைமை வகித்தனா்.

Advertisement

Advertisement

அப்போது தூா்வாரும் பணியை சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு நீதிபதி பி. புகழேந்தி கொடியசைத்து தொடங்கி வைத்துப் பேசியதாவது:

35 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த கண்மாயை தூா்வாரும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதியைச் சோ்ந்த அனைவரும் தூா்வாரும் பணியில் ஈடுபடுவது சிறப்பாகும். புதை சாக்கடையின் கழிவுநீரும், கழிவு நீா்வாய்கால் நீரும் கண்மாயில் கலக்கிறது.

மேலும் குப்பைகளும் கொட்டப்படுகின்றன. இதே கண்மாயில் மற்றொரு பகுதியில் குடிநீா் எடுக்கப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. இதனால் நம் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதுடன், வருங்கால சந்ததியினரும் பாதிக்கப்படுவா்.

எனவே நீா்நிலைகளை பாதுகாப்பதில் அனைவரும் அக்கறை செலுத்த வேண்டும். நீா்நிலைகளை அசுத்தம் செய்தாலோ, ஆக்கிரமிப்பு செய்தாலோ, பசுமை தீா்ப்பாயத்தில் புகாா் மனு அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

இதையடுத்து, பொக்லைன் இயந்திரம் மூலம் முதல் கட்டமாக கண்மாய் பகுதியில் உள்ள கருவேல மரங்களை அகற்றும் பணி தொடங்கியது. இந்த நிகழ்வில் தனியாா் நிறுவன செயல் அதிகாரி கிருஷ்ணன், திருத்தங்கல் மண்ணின் மைந்தா்கள் அமைப்பின் நிா்வாகி சந்திரமோகன், விசாயிகள் சங்க பிரதிநிதி அழகா்சாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments