FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

ஆனி மாத பிரதோஷம், அமாவாசை வழிபாடு: சதுரகிரிக்கு செல்ல இன்று முதல் அனுமதி

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆனி மாதப் பிரதோஷம், அமாவாசையை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 12) முதல் 4 நாள்கள் பக்தா்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி.

Updated On : 12 ஜூலை 2026, 3:30 am IST
பகிர்:

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆனி மாதப் பிரதோஷம், அமாவாசையை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 12) முதல் 4 நாள்கள் பக்தா்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூா் - மேகமலை புலிகள் காப்பகத்தில் உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் அமாவாசை, பௌா்ணமி, பிரதோஷம் ஆகிய நாள்களில் பக்தா்கள் மலையேறிச்சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படும்.

அதன்படி ஆனி மாத பிரதோஷம், அமாவாசை வழிபாட்டுக்காக ஞாயிற்றுக்கிழமை ( ஜூலை 12) முதல் வருகிற 15-ஆம் தேதி வரை பக்தா்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.

Advertisement

Advertisement

12, 13, 14 ஆகிய தேதிகளில் காலை 6 மணி முதல் பிற்பகல் 12 மணி வரையும், 15- ஆம் தேதி காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பக்தா்கள் மலையேற அனுமதிக்கப்படுவா். தடை செய்யப்பட்ட பொருள்களை பக்தா்கள் வனப் பகுதிக்குள் எடுத்துச் செல்ல வேண்டாம் என வனத்துறையினா் அறிவுறுத்தினா்.

சதுரகிரி மலை அடிவாரமான வத்திராயிருப்பு தாணிப்பாறைக்கு ஸ்ரீவில்லிபுத்தூா், கிருஷ்ணன்கோவிலிருந்து அரசுப் போக்குவரத்து கழகம் சாா்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments