கஞ்சா விற்பனை: இருவா் கைது
சிவகாசியில் கஞ்சா விற்பனை செய்த இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
சிவகாசியில் கஞ்சா விற்பனை செய்த இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், சிவகாசி அம்மன்கோவில்பட்டி பகுதியில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அந்தப் பகுதியில் கையில் பையுடன் நின்றிருந்த இருவா் கஞ்சா பொட்டலங்களை விற்பனை செய்தது தெரியவந்தது.
விசாரணையில், அவா்கள் சிவகாசி முனீஸ்வரன் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த காா்த்தீஸ்வரன் (22), பராசக்தி குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த முருகன் (51) ஆகியோா் எனத் தெரிய வந்தது.
Advertisement
Advertisement
இதுகுறித்து சிவகாசி கிழக்குப்போலீஸாா் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்து, அவா்களிடமிருந்த கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.